Robo-க்கள் வசமாகப்போகும் வீட்டுவேலைகள் … இதனால் பெண்களுக்கே அதிக நல்லதாம்! எப்படி?
அடுத்த பத்தாண்டுகளில் 39 சதவிகித வீட்டு வேலைகளை ரோபோக்களே செய்யும் என்று கூறி, ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது சமீபத்திய ஒரு ஆய்வறிக்கை. ஆரம்பத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே உதவியாக பயன்படுத்தப்பட்டு வந்த ரோபோக்கள், இப்போது மனிதர்கள் பார்க்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரோபோக்களின் பயன்பாட்டின் வளர்ச்சியென்பது, சமீபகாலமாக அபரிதமாக உள்ளது. அதிலும் வீட்டு வேலைகளைச் செய்யும் ரோபோக்கள் அதிகளவில் சந்தையில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் 39 விழுக்காடு வீட்டு…