ரயிலில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பை.. எடுத்து பார்த்ததும் ’ஷாக்’ ஆன போலீஸ்!
வாணியம்பாடி அருகே விரைவு ரயிலில் போலீசார் நடத்திய சோதனையில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் விரைவு ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி – ஜோலார்பேட்டை கிடையே வந்தபோது ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 4 பேர் கொண்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது…