மணமகன் கையிலிருந்து தாலியைப் பிடுங்கி மணமகளுக்கு கட்டமுயன்ற காதலன்! – சினிமா பாணியில் நடந்த சம்பவம்
சென்னை, தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த இருவருக்கு நேற்று முன்தினம் காலை திருமணம் நடக்க இருந்தது. குறித்த முகூர்த்த நேரத்தில், மணமகன் தாலியைக் கட்ட முற்பட்டார். அப்போது, மணமேடைக்கு வந்த வாலிபர் ஒருவர், மணமகனின் கையிலிருந்த தாலியைப் பிடுங்கி மணமகளுக்குக் கட்ட முற்பட்டார். இதை சற்றும் எதிர்பார்த்த உறவினர்கள், அந்த வாலிபரைத் தடுத்து நிறுத்தி அவரின் கையிலிருந்த தாலியைப் பிடுங்கியதோடு, அவரை அடித்து உதைத்தனர். திருமணம் இந்தச் சம்பவம் தொடர்பாக ஆர்.கே நகர்ப் பகுதி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது….