`தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை தேவை’- மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் கடந்த 20 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டதையும், அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவருவதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கடிதத்தில்…