ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா: 200 ஆண்டுகளாக தொடரும் வழிபாடு
வாழப்பாடி அருகே 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே வழிபடும் வனக்காவல் தெய்வமான அஞ்சாலன் குட்டை முனியப்பன் வினோத திருவிழா விமர்சையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சியில்; 150 ஏக்கரில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியின் நடுவில் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. தற்போது இந்த வனப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு சிலர், இவ்வழியே செல்லும் பொதுமக்களை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து…