`என்னைதான் கல்யாணம் செய்துக்கணும்’- ஆயுதத்துடன் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது!
காதலித்து வந்த பெண், காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்தவர், அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று கத்தியை காட்டி மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் கௌதம். இவருக்கும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சாந்தனாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் கடந்த 2016 முதல் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அந்தப் பெண் வேறு ஒரு நபரை…