கொரோனா நிவாரண நிதி 2ஆம் தவணை ரூ.2000 – நாளை தொடங்கிவைக்கிறார் முதல்வர்
கொரோனா நிவாரண நிதியுதவியின் இரண்டாவது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதில் முதல் தவணையாக ரூ.2000 மே மாதம் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் தவணையை நாளை முதல்வர் தொடக்கி வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் அனைத்து பத்திரிகைகளுக்கும் விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், ஜூன் 3ஆம் தேதியான முன்னாள்…