தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி – துக்கம் தாளாமல் மாடியில் இருந்து குதித்த காவலர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த துக்கம் தாளாமல், சிறப்பு காவல் உதவியாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடாபுரம் அடுத்த பா.முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமாகிய நிலையில், அவர்கள்…