கட்டப்பட்ட 14 ஆண்டுகளில் இடிந்துவிழுந்த மருத்துவமனை மேற்கூரை – அச்சத்தில் நோயாளிகள்
வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை உள்ள பிரசவ வார்டு கட்டட மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் மருத்துவமனைக்கு பிரசவம் பார்க்க வந்த பெண்ணின் தாயார் காயமடைந்தார். வேதாரண்யத்தில் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை கடந்த ஆண்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. வேதாரண்யம் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் இங்கு சிகிச்சைபெற்று செல்கின்றனர். தாலுகாவில் பிரசவம் பார்க்கும் அளவிற்கு உள்ள ஒரே அரசு மருத்துவமனை என்பதால் இந்த மருத்துவமனைக்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த…