22 வயதில் முதல் சதம் விளாசல்.. ரோகித்தை பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில்.. டாப்பில் யுவராஜ்!
ஜிம்பாப்பேக்கு எதிராக தனது சர்வதேச முதல் சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில். இந்தியா ஜிம்பாப்பே இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஜிம்பாப்பேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளை முறையே 10 விக்கெட்டுகள் மற்றும் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றிருந்தது. தொடரையும் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது….