பூர்விக மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் மொயீன் அலி
பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு மொயீன் அலி தலைமை தாங்குகிறார். பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஏழு டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரானது நாளை (செப்.20) முதல் அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கிலாந்து அணி 17 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சென்றிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கராச்சியில் நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு மொயீன் அலி தலைமை தாங்குகிறார். மொயீன்…