ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் திறப்பு – எங்கே தெரியுமா?
ஸ்ரீநகரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற, தால் ஏரியை ஒட்டி இந்திரா காந்தி நினைவு துலிப் மலர்த் தோட்டம் உள்ளது. இங்கு பல வண்ணங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டுள்ள துலிப் மலர்கள் வளர்க்கப்படுகின்றன. வசந்த காலத்தில் நடைபெறும் துலிப் மலர்த் திருவிழாவையொட்டி, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக மலர் சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது துலிப் மலர்த் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில்,…