அமிர்தி வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் – மழை பெய்ததால் காட்டுத்தீ தவிர்ப்பு
வேலூரில் அமிர்தி வனப்பகுதியில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. உள்ளிருந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தக்கசமயத்தில் மழை வந்ததால் பெரும் காட்டுத் தீ விபத்து தடுக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டை சேர்ந்த ஆனதன் உட்பட 2 பேர் வேலூர் – திருவண்ணாமலை மாவட்ட எல்லையான ஜவ்வாது மலை தொடரில் அமைந்துள்ள அமிர்தி சிறு மிருகக்காட்சி சாலைக்கு இன்று (14.05.2022) மாலை காரில் (இன்டிகோ) சென்றிருக்கின்றனர். அங்கிருந்து திரும்பும்போது அமிர்தி வனப்பகுதியில் சென்றுகொண்டிருந்த காரின் முன்பக்க என்ஜினில் திடீரென…