பூமிக்கு கேடாகும் நெகிழிக் குப்பைகள்.. அமலுக்கு வந்தது தடை உத்தரவு
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, ஒருமுறை பயன்படுத்தி வீசி எறியப்படும் நெகிழி கழிவுகளை பயன்படுத்துவதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் தலைமையிலான குழுவினர் அவ்வப்போது ஆழ்கடலுக்குச்சென்று அங்கு சேகரமாகும் நெகிழி கழிவுகளை சுத்தம் செய்துவருகிறார்கள். முகக்கவசம், நெகிழி பாட்டில்கள் என கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் தரும் குப்பைகள், கடலுக்கு மட்டுமல்ல, மனித குலத்துக்கே கேடாகத்தான் அமைகின்றன. இதேபோல, அலட்சியமாக வீசி எறியப்படும் நெகிழி கழிவுகள், மாடுகள் உள்ளிட்ட உயிரினங்களின் உயிருக்கே உலை…