மொபைல் பேட்டரி சார்ஜ் குறைந்தால் கவலையடையும் இந்தியர்கள்… ஆய்வில் சுவாரஸ்யம்!
மக்களிடையே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத விஷயங்களில் மொபைல்போனும் ஒன்றாகி விட்டது. மொபைல் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை என்று சலித்துக் கொள்பவர்களும் உண்டு. மொபைல்போன் பழுதடைந்துவிட்டால் பதறிப்போய்விடுபவர்களும் உண்டு. சார்ஜர் ஏற்கெனவே மொபைல்போன் இல்லாமல் இருந்தால் ஏற்படும் பயத்தை, நோமோபோபியா (Nomophobia) என்று அழைக்கின்றனர். இப்படியிருக்கையில், `மொபைல் போனில் பேட்டரி குறைந்தால் மக்களிடையே ஒருவித அச்ச உணர்வு உண்டாகிறது’ என பிரபலமான ஓப்போ (Oppo) மொபைல் நிறுவனத்துடன் இணைந்து,…