மதுக் கொள்கை ஊழல்: சிறையிலுள்ள டெல்லி அமைச்சர் சத்தியந்திர ஜெயினிடம் அமலாக்கத்துறை விசாரணை
டெல்லி மதுக் கொள்கை ஊழல் புகார் தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்தியந்திர ஜெயினிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டெல்லி மது கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சத்தியேந்திர ஜெயினிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி கடந்த புதன்கிழமை அமலாக்கத்துறையினர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி…