வேலியே பயிரை மேய்வதா? – தூங்கிக்கொண்டிருந்த நபரின் செல்போனை லாவகமாக திருடிய காவலர்!
கான்பூரில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த நபரிடமிருந்து போலீஸ் ஒருவர் செல்போனை லாவகமாக திருடிச்செல்லும் வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. பொதுவாக திருட்டு நடந்தால் போலீசாரிடம் புகாரளிப்போம். ஆனால் பொதுமக்களிடமிருந்து போலீசே திருடிச்சென்றால் யாரிடம் முறையிடுவது? இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது கான்பூரில் நடந்துள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையோரம் ஒரு நபர் படுத்து உறங்கிக்கொண்டுள்ளார். அதிகாலை நேரத்தில் அந்த பகுதியில் சீருடை அணிந்த இரு போலீசார் நடந்துவருகின்றனர்….