கிராம வங்கி ஊழியர்கள் பணிக்குத் திரும்புங்கள் – நீதிமன்றம் உத்தரவு
ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் 168 பேரை உடனடியாக பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது, அதில், 50 சதவிகித ஊழியர்களுடன் முக்கியப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மற்றவர்கள் சுழற்சி முறையில் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியைச் சேர்ந்த 168 ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத்…