`இந்தச் சூழல், போருக்கு எந்தவகையிலும் குறைந்தது இல்லை!’ – பா.ஜ.க-வினரிடம் உரையாடிய பிரதமர் மோடி
இந்தியாவின் ஆளும்கட்சியாகவும் பெரும் தேசியக் கட்சியாகவும் உள்ள பா.ஜ.க, 1980-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் 40-வது ஆண்டு தொடக்கவிழா இன்று நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீடியோ மூலம் தொண்டர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி அப்போது, “இந்தியா உட்பட மொத்த உலகமும் ஒரு கடினமான சூழலைச் சந்தித்துவரும் இந்த நேரத்தில், பா.ஜ.க-வின் தொடக்கநாள் வந்துள்ளது. மனிதம் ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறது….