மும்பையில் 2 செவிலியர்களுக்கு கொரோனா சோதனை: மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பு
மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2 செவிலியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தாதரில் உள்ள சுஷ்ருஷா மருத்துவமனையின் 27 வயது மற்றும் 42 வயது மதிக்கத்தக்க இரண்டு செவிலியர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆகவே அதைத் தொடர்ந்து இந்த மருத்துவமனைக்கு புதிய நோயாளிகள் வருவதற்கான அனுமதியை நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பிரிஹன்மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) மருத்துவமனையில் பணிபுரியும் கிட்டத்தட்ட 28 செவிலியர்களை உடனே தனிமைப்படுத்துமாறு அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்தைக் கேட்டு…