கொரோனாவை பரப்புவதாகக் கூறி ஒதுக்கிய கிராம மக்கள்.. ஏழை விவசாயி எடுத்த விபரீத முடிவு
இந்தியா மிகவும் கசப்பான ஒரு அனுபவத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் கொரோனா நோய் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மற்றொருபுறம் மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ள பயத்தால், கொரோனா பாதித்தவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள், கொரோனா பாதிப்புடையவர்களுடன் பழகியவர்கள் சுற்றத்தாரால் அனுபவிக்கும் கொடுமைகள் மிகவும் ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. சில நேரங்களில் அது உயிரிழப்பில் கொண்டு போய் விட்டுவிடுகிறது. அப்படித்தான் மதுரையிலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த வகையில்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகவும் துயரமான சம்பவம்…