உலக சாதனைக்காகக் காத்திருக்கும் பலாப்பழம் – ஆத்தாடி!
கேரள மாநிலத்தில் காய்த்த பலாப்பழம் ஒன்று உலக சாதனை படைக்க உள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ளது எடமுலக்கல். இந்தப் பகுதியில் விவசாயம் பார்த்து வரும் விவசாயி ஜான்குட்டி. இவரது தோட்டத்தில் உலகின் கனமான மற்றும் மிக நீளமான பலாப்பழம் ஒன்று காய்த்துள்ளது. ஆகவே இவர் இந்தியாவின் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கின்னஸ் சாதனைகளுக்கு விண்ணப்பித்துள்ளார். இவரது தோட்டத்தில் காய்த்திருக்கும் இந்தப் பலாப்பழம் 97 சென்டிமீட்டர் நீளமும் 51.5 கிலோ எடையும் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது பற்றிப் பேசிய ஜான்குட்டி, “இந்தப் பலாப்பழம் பெரிதாகத் தெரிகிறது. நான் ஒரு…