ம.பி: வகுப்பறைக்குள் பெய்த மழை- குடை பிடித்தபடி பாடம் கவனித்த மாணவர்கள்; வீடியோ வைரல்!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் மேற்கூரை சேதமடைந்ததன் காரணமாக வகுப்பறைக்குள் மழைநீர் கசிவதால், குடை பிடித்தபடி மாணவர்கள் பாடம் கவனிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் கைரிகலா எனும் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் அதிகமாக பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் மேற்கூரை கடுமையாக சேதமடைந்து மழைநீர் வகுப்பறைகளுக்குள் கசியும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் குடைபிடித்தபடி மாணவர்கள் தொடர்ந்து ஆசிரியர் எடுக்கும்…