`ப்ளாஸ்டிக்கிற்கு எதிரான போர் மட்டும் முடியவில்லை’-10 வயது மணிப்பூர் செயற்பாட்டாளர் ட்வீட்
மணிப்பூரில் 10 வயதாகும் காலநிலை மாற்ற செயற்பாட்டாளர் லிசிபிரியா கன்குஜம், பொது வெளியொன்றில் கிடந்த குப்பைகளை சுத்தம் செய்யும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். அவர் வசிக்கும் மணிப்பூர் மாநிலத்தில் `யாவ்ஷாங்’ என்ற திருவிழாவொன்று கொண்டாட்டப்படுவது வழக்கம். அந்த திருவிழா முடிந்த பிறகு குப்பைகள் அதிகமாக சேர்ந்திருப்பதாகவும் அதையே தான் சுத்தம் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில் “யாவ்ஷாங் முடிந்துவிட்டது. ஆனால் ப்ளாஸ்டிக்கிற்கு எதிரான போர் மட்டும் முடியவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார். Before After…