வால்பாறை: கோழி வளர்ப்புக்கூண்டில் கால்கள் சிக்கிய நிலையில் இறந்துகிடந்த சிறுத்தைப்புலி
வால்பாறை அருகே குடியிருப்புப் பகுதியில் மர்மமான முறையில் ஆண் சிறுத்தைப்புலி உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து வனத்தைவிட்டு வனவிலங்குகள் அவ்வப்போது வெளியேறி குடியிருப்புப்பகுதிக்குள் வந்துபோவது வழக்கம். இந்நிலையில் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வரட்டுப்பாறை பகுதியில் உசேன் என்பவரின் தேநீர் கடையின் பின்புறம் கோழி வளர்ப்புக்கூண்டில் கால்கள் சிக்கிய நிலையில் சிறுத்தைப்புலி ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. சம்பவ இடத்திற்குச் சென்ற வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் சிறுத்தை உயிரிழந்ததை…