தண்ணீர்வரத்து அதிகரிப்பு – களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!
தொடர் மழையால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதியில் தலையணை அமைந்துள்ளது. இந்த தலையணையில் உள்ள தடுப்பணையில் குளிப்பதற்காகவும், பார்ப்பதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த பகுதியில் சாரல் மழை பெய்து வந்தது. இன்று அதிகாலை தலையணை பகுதிக்கு மேலே உள்ள அடந்த வனப்பகுதிகளான செங்கல்தேரி, கோழிகால் ஓடை…