வால்பாறையில் புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சி அளிக்கும் வனத்துறை
தமிழகத்தில் முதல்முறையாக வால்பாறையில் புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடீஸ் எஸ்டேட் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி உடலில் காயங்களுடன் இறக்கும் தருவாயில் புலிக்குட்டி ஒன்று மீட்கப்பட்டது. 8 மாதமே ஆன அந்த புலிக்குட்டியின் உடலில் முள்ளம் பன்றியின் முட்கள் குத்தி இருந்த நிலையில், தனிக் கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஓன்றரை வயதான (16 மாதம்) அந்த புலிக் குட்டி ஆரோக்கியத்துடன் இருந்து வரும்…