புதுச்சேரி: ‘ஹரியானா துஷ்யந்த் சவுதாலாவின் நிலைதான் ரங்கசாமிக்கும்!’ -எச்சரிக்கும் நாராயணசாமி
புதுச்சேரி காங்கிரஸ்-தி.மு.க ஆட்சியைத் திட்டமிட்டுக் கலைத்து ஜனநாயகப் படுகொலை செய்ததாக பி.ஜேபி மீது குற்றம் சுமத்தி மதச் சார்பற்ற கூட்டணி சார்பில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் நாராயணசாமி, “மத்தியில் இருக்கும் பாசிச மதவாத சக்தியான பா.ஜ.க, புதுவை மாநிலத்தில் காங்கிரஸ், தி.மு.க மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்த்துள்ளதைக் கண்டித்து 21 கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த ஜனநாயக படுகொலையை இங்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க அரங்கேற்றியிருக்கிறது. அருணாச்சல…