அன்று பாடம் சொல்லித்தந்த இடம்; இன்று இளைஞர்கள் சீரழியும் இடம் – இந்த அவலம் `சென்னை’யில் தான்
சென்னை சாலிகிராமத்தில், மறைந்த கேப்டன் விஜயகாந்த் இல்லத்துக்கு அடுத்த தெரு, வேலாயுதம் காலனி 1ஆவது தெரு. இங்கிருந்த இராமலிங்க மிஷன் நடுநிலைப் பள்ளி 1952-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு, 2015 சென்னை பெருவெள்ள பாதிப்பின் காரணமாக கங்கப்பா நாயுடு தெருவுக்கு மாற்றப்பட்டது. இதுமட்டுமின்றி இப்பள்ளியில் சத்துணவு கூடம் ஒன்று 10.11.2003 ஆம் நாள் 129 வார்டு மாமன்ற உறுப்பினர் சுப முத்துவேல் என்பவரால் தொடங்கப்பட்டது. பள்ளி மாற்றப்பட்ட பின்னரும் இங்குச் சத்துணவு கூடம் தொடர்ந்து இயங்கி வந்தது. ஆனால்…