சர்வதேச விருதுகள் வாரிக் குவிக்கும் ‘அறமுடைத்த கொம்பு’ திரைப்படம்!
சர்வதேச அரங்கில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை இரண்டாவது முறையாக பெற்றுள்ளது நெல்லையை சேர்ந்த இளம் இயக்குனரின் முதல் படைப்பான “அறமுடைத்த கொம்பு” திரைப்படம். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர் ஜாக்சன்ராஜ். இவர் பரியேறும் பெருமாள் இயக்கிய மாரி செல்வராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் பிறந்த மாவட்டமான நெல்லைக்கு பெருமை சேர்க்கும் வகையில் “நெல்லை ஆந்தம்” என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி…