சோர்வடைவதில் இருந்து தப்பிக்க வழி! – க்வாரன்டீனில் இருப்பவர்களுக்கு புத்தகம் வழங்கும் காவல்துறை
கேரளாவில் மார்ச் 11-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டது முதல், நாள்தோறும் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. இன்று (ஏப்ரல் 2) காலையில் புதிதாக 24 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் கொரோனா பாதித்தவர்களில் 25 பேர் குணமடைந்துள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக காசர்கோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கிறது. அந்த மாவட்டத்தில் மட்டும் 78 பேர்…