வாருங்கள் வாசகர்களே… நம் உறவுகளின் துயர் துடைப்போம்!
வரலாறுகளில் படித்திருக்கிறோம். கிராமப்புறங்களில் ஒலிக்கும் கதைப்பாடல்களில் கேட்டுக் கடந்து போயிருக்கிறோம். இப்படியொரு மருத்துவப் பேரிடரை நம்காலத்தில் எதிர்கொள்வோம் என்று யாரும் கற்பனைகூடச் செய்திருக்கமாட்டோம். மொத்த உலகத்தையும் கொரோனாத் தொற்று துவம்சமாக்கிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரும் உயிர்ச் சேதத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரே தீர்வு, சமூக விலகல் மட்டுமே என்பதால் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள். தொழில்கள் முடங்கி, உற்பத்தியும் குறைந்துவிட்டது. கொரோனாவுடனான இந்த யுத்தத்தில், அமைப்புசாராத் தொழிலாளர்களும், அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் எளிய மக்களும் பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஒருவேளை உணவுகூட…