நாகப்பட்டினம்: கனமழையால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதம்
வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்து நெற்பயிர்கள், கடந்த நான்கு நாட்கள் பெய்த கனமழையால் தண்ணீரில் முழ்கியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாரத்தில் கடந்த நான்கு நாட்கள் பெய்த கனமழையில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தும் முழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை சீராக பெய்து பயிர்கள் நன்றாக விளைந்து பத்து நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. கடந்த ஆண்டுகளை காட்டிலும்…