“நடிகர்களை ரசிங்க; ஆனா, தியாகிகளை நேசிங்க!”- ஈரோட்டில் தமிழ் சினிமா இயக்குநர்கள் உருக்கம்
நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு முக்கிய தலைவர்களின் ஊர்களுக்குச் சென்று அவர்கள் வாழ்ந்த மண்ணைச் சேகரிக்கவும், அவர்களின் நினைவுகளைப் பதிவு செய்யவும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், சக்ரா விஷன் இந்தியா பவுண்டேஷன் சார்பில் தாய்மண் யாத்திரை நடத்தத் திட்டமிட்டு, அதன் தொடக்கவிழா நேற்று ஈரோடு சென்னிமலையில் நடைபெற்றது. முதலில் சென்னிமலையில் வாழ்ந்த திருப்பூர் குமரனின் இல்லத்தில் இருந்து மண்ணைச் சேகரித்தபின், கொடுமுடியில் வாழ்ந்த நடிகையும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான கே.பி.சுந்தரம்பாள் நினைவாகவும், கொடுமுடி…