‘கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்’ – ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை
கடந்த வாரம் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, உலக அளவில் கோதுமை விலை உச்சம் தொட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்த ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் தற்போது பேசியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக கருங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோதுமை உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் உக்ரைனிலிருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் உள்ளது. இக்காரணங்களினால் உக்ரைனிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் நாடுகள்…