தங்கத்தில் மினியேச்சர் வில்லிசைக் கருவிகள் – நாட்டுப்புறக் கலையைப் பாதுகாக்க விழிப்புணர்வு முயற்சி!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். அப்பகுதியில் நகைப்பட்டறை வைத்து நடத்திவருகிறார். இவர், தேசிய மற்றும் உலக அளவில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி மிகக் குறைந்த அளவு தங்கத்தில் பல்வேறு பொருள்களைச் செய்வதில் பிரபலமானவர். விருதுநகர் மாவட்டத்தில் தற்சமயம் பங்குனிப் பொங்கல், கோயில் கொடை மற்றும் சித்திரைத் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஆடல்-பாடல், கேரளச் செண்டை மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. இதனால் தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான வில்லிசைக் கச்சேரிக்கு…