நெல்லை: பாய்மரப் படகு கவிழ்ந்து கடலுக்குள் தத்தளித்த வீரர்கள்- பாரம்பர்யப் போட்டியில் நடந்த விபரீதம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்டம், உவரி தி.மு.க சார்பாக பாரம்பர்ய பாய்மரப் படகுப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெல்லை மாவட்டம், பெருமணல் முதல் உவரி வரை நடைபெற்ற படகுப்போட்டியில் உவரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏழு படகுகள் கலந்துகொண்டன. ஒவ்வொரு படகிலும் தலா 10 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற படகுகள் இந்தப் போட்டியில் மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கடலோரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர், பாய்மரப் படகுகள் கடலுக்குள் பாய்ந்து செல்வதைப் பார்த்து…