கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோக்கள் தயார்
கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்களைக் கொடுக்கும் வகையில் இளைஞர்கள் வடிவமைத்த ரோபோக்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்படவுள்ளன. திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியியல் பட்டதாரிகள், பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் வகையில் ரோபோக்களை வடிவமைத்தனர். இந்த ரோபோக்களை தற்போது கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் மாற்றியமைத்துள்ளனர். கொரோனா நோயாளிகளை நேரடியாக மருத்துவர்கள் அணுகுவதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்குத் தேவையான மருந்து மற்றும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் வகையில் இந்த…