ஆளுநர், அமைச்சர் பதவிகள் வேண்டாம்! – பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர்
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தலைவர்கள் அணி மாறிக்கொண்டிருக்கின்றனர். நேற்று இரவு முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் சீட் கிடைக்காத அதிருப்தியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். அவரை சமாதானப்படுத்த பா.ஜ.க. தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்கவில்லை. இது குறித்து முதல்வர் பசவராஜ் கூறுகையில், “ஜெகதீஷ் ஷெட்டார் மூத்த தலைவர். அதோடு இப்பிராந்தியந்தில் முக்கிய தலைவர். அவருக்கு டெல்லியில் முக்கிய பதவி கொடுப்பதாக கட்சி தலைவர் நட்டாவும்,…