கத்திக்குத்தில் முடிந்த குழாயடிச் சண்டை; போலீஸில் புகாரளித்ததால் வெறிச்செயல்!
சென்னை திருவான்மியூர், அண்ணாதெரு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஹரி விக்னேஷ் (26). இவரின் மனைவி பாக்கியலட்சுமி, பெரியம்மா லதா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டுக்கு அருகில், சரண்ராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இரு குடும்பங்களுக்கும் இடையே அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் வருவது வழக்கமாக இருந்துவந்திருக்கிறது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, இருவரும் வீட்டில் பேசிக் கொள்வதைக்கூட `நம்மைதான் திட்டுகின்றனர்’…