ஓசூர்: 20 டன் ரேஷன் அரிசி கடத்தியபோது மாரடைப்பால் டிரைவர் பலி! – போலீஸார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளி அருகே, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஒரு லாரி பல மணி நேரமாக நிற்பதாகவும், லாரியை ஓட்டி வந்த டிரைவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் இன்று அட்கோ போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், டிரைவர் சடலத்தை மீட்டு விசாரித்ததில், லாரியை ஓட்டிவந்தது சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (50) என்பது தெரியவந்தது. லாரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்று சோதனை செய்ததில், சாக்குப்பைகளில் நிறைய மூட்டைகள் இருந்தன….