மயிலை கடித்து குதறிய நாய்கள்! காப்பாற்றி சிகிச்சை அளித்த இளைஞர்கள்!
ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே நாய்கள் துரத்தி கடித்ததில் மயிலுக்கு கால் உடைந்து மயங்கி விழுந்தநிலையில், மயிலை மீட்ட இளைஞர்கள் சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள காடையாம்பட்டி அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் மயில்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. அங்குள்ள கரடு, குன்று மற்றும் தோப்பு போன்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் மயில்கள், அங்கேயே தங்கி இனபெருக்கம் செய்து வாழ்கின்றன. இந்த நிலையில் கஞ்சநாயக்கன்பட்டி அருகேயுள்ள சோலை நகர் என்ற கிராமத்தின் கரடு…