ஆட்சிமாற்றத்திற்கு பிறகு பயங்கர தாக்குதல் – காபூலில் குண்டுவெடிப்பில் 100 குழந்தைகள் பலி?
காபூலில் உள்ள ஒரு கல்வி மையத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 100 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் மற்றும் பலர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவத்தில் மாணவர்கள் உட்பட பெரும்பாலும் ஹசாராக்கள் மற்றும் ஷியாக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. முதலில் 19 பேர் பலி என்று செய்தி வெளியான நிலையில் தற்போது 100 குழந்தைகள் பலி என்று கூறப்படுகிறது. தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் உள்ள கல்வி மையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டு இருக்கும்போது தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள்…