அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்-விசாரணையில் அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவின் அலபாமா நகரில், கேரளாவின் திருவல்லா பகுதியைச் சேர்ந்த மரியம் சூசன் மேத்யூ என்ற 19 வயது இளம் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். அலபாமா நகரில் உள்ள தனது வீட்டில் மரியம் சூசன் மேத்யூ தூங்கிக் கொண்டிருந்தபோது, மேல் தளத்தில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த நபரே சுட்டுக்கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, இது தொடர்பாக மாண்ட்கோமெரி காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் கொலையை பற்றி தென்மேற்கு…