தமிழ்நாட்டில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி 66.2% – மூன்றாம் கட்ட ஆய்வில் தகவல்
தமிழ்நாட்டில் 66.2% கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில், நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் கூட்டு எதிர்ப்புத்திறன் எவ்வளவு உருவாகியுள்ளது என்பதைக் கண்டறிய 3ஆம் கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் பொது சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 26,610 மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 17,624 பேருக்கு நோய் எதிர்ப்புத்திறன் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. 26,610 மாதிரிகளில் 888 திரள்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளும்…