3 சென்ட் நிலத்தில் அடர்வனம்.. சாதித்துக் காட்டிய சூழலியாளர்!
கேரள மக்கள் பெரும்பாலும் பசுமையான மற்றும் வயல்வெளிகள் நிறைந்த சுற்றுப்புற சூழ்நிலைகளில்தான் வாழ்ந்திருப்பர். எம்.ஆர். ஹரியும் அப்படித்தான் வளர்ந்தார். கோட்டயத்தில் இருந்த அவரது பூர்வீக வீட்டைச்சுற்றி ஏராளமான பழ வகை மரங்களும் மருத்துவக் குணம் கொண்ட செடி கொடிகளும் சூழ்ந்து இருந்தன. 90களில் படிப்பிற்காக திருவனந்தபுரம் சென்றபோது நகரமயமாக்கலின் பாதிப்பினால் பசுமைப்பரப்பு குறைந்து வருவதை கண்ணால் பார்த்தவர் அதை காக்கும் பொருட்டு சமூக நல இயக்கங்களுடன் சேர்ந்து போராடியும் இருக்கிறார். இருந்தாலும் தற்போது தான் தன்னால் இயன்ற…