20ஆம் தேதி வழக்கு விசாரணை.. ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சிக்கல் வருமா?
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை முன்கூட்டி விசாரிக்க வேண்டுமென்ற மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை விசாரிக்க உள்ளது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி என்பவர் அதிமுக உறுப்பினர் என கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா…