பாரத் பந்த்: வேதாரண்யத்தில் டிராக்டர், மாட்டு வண்டிகளுடன் நடந்த போராட்டம்!
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 13-வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு ஆதரவாக இன்று விவசாய சங்கங்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சேவை அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாகை மாவட்டம் முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குக்கிராமங்களில்கூட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த பந்த்-தில் மட்டும்தான் விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளார்கள் மட்டுமல்லாது, நடுத்தர கிராமத்துப் பெண்களும்…