கொரோனா பாதிப்பு: கல்லூரி தேர்வுகளின் நிலை என்ன ?
கொரோனா பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கல்லூரித் தேர்வுகளின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலை அறிவியல், பொறியியல், ஆசிரியர் கல்வியியல் உள்ளிட்ட அனைத்து வித கல்வி நிறுவனங்களும் 31ஆம் தேதிவரை மூடப்படுவதாகவும், தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மார்ச் 24ஆம் தேதி பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்….