“மலைகளையும் காடுகளையும் பாடிக் கொண்டே இருப்பேன்” – யார் இந்த பாடகி நஞ்சியம்மா?
மலைகளையும் காடுகளையும் பாடிக் கொண்டே இருப்பேன் என்று கூறிய பழங்குடியின பாடகி நஞ்சியம்மா, ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். அனுபவமே பாடல் வரிகள், உணர்வுகளே மெட்டு, இயற்கையே இசை…. இப்படியான ஒரு பாடல் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது… காடு மலைகளில் அலைந்து திரிந்து, உழைப்பின் களைப்பகல, உள்ள மொழியால் பாட்டிசைக்கும் பழங்குடியினத்தின் பாட்டி நஞ்சியம்மா சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்றிருக்கிறார்.. சுதி பிசகாமல், சுரஸ்தானங்களில் கவனம் சிதறாமல் பாடிய பல பாடல்கள் தேசிய விருதுகளை வென்றிருக்கின்றன. பாடறியேன் படிப்பறியேன் என்ற பாடலுக்காக, முறையாக இசை பயின்று…